என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு
நீங்கள் தேடியது "தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு"
தமிழ்நாட்டில் பரவலான வளர்ச்சி ஏற்படும் வகையில் 22 மாவட்டங்களுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
கோவை:
மாநாட்டின்போது, தமிழ்நாடு நிதி நுட்ப கொள்கை 2021 -யை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
இந்த விழாவில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள், தொழில் நிறுவனங்கள், தொழில் அதிபர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:-
தமிழ்நாடு அரசு மீது நம்பிக்கை வைத்து அனைத்து தொழிலதிபர்களும், தொழில் நிறுவனங்கள் சார்பில் வந்திருப்பவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
சோதனையான காலத்திலும் தமிழ்நாட்டுக்கு ஏராளமான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. மே மாதத்தில் ஆட்சிக்கு வந்தோம். ஜூலை மாதத்தில் முதலீட்டாளர் மாநாடு நடத்தினோம். செப்டம்பரில் ஏற்றுமதியாளர் மாநாடு நடத்தப்பட்டது. மீண்டும் நவம்பர் மாதத்தில் அடுத்த முதலீட்டாளர் மாநாட்டுக்கு வந்திருக்கிறோம். கடந்த 5 மாதங்களில் 3-வது முறையாக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டுள்ளது. இதே வேகத்தில் போனால், முதலீடுகளை ஈர்ப்பதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் பெறும்.
நாம் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற லட்சிய இலக்கினை அடைவது வெகு தொலைவில் இல்லை என்ற நம்பிக்கையை எல்லோருக்கும் அளித்துக் கொண்டு வருகிறோம்.
மேலும், தமிழ்நாட்டில் பரவலான வளர்ச்சி ஏற்படும் வகையில் 22 மாவட்டங்களுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 2,3-ம் கட்ட நகரங்களில் நியோ டைடல் பார்க்குகள் அமைக்கப்படும்.
இந்த 52 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் வரவுள்ள திட்டங்களால் 74,835 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். நாட்டிலேயே தமிழ்நாடு முதல் மாநிலமாக வளர்ச்சி அடைவதுதான் எனக்கு உண்மையான மகிழ்ச்சி.
இவ்வாறு அவர் பேசினார்.
இதையும் படியுங்கள்.. கோவையில் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு- மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.35,208 கோடிக்கு ஒப்பந்தம்
தொழில் வளத்தையும், கட்டமைப்பையும் ஊக்குவிப்பதற்காக முதலீட்டாளர்கள் மாநாட்டை அந்தந்த மாநில அரசுகள் முக்கியத்துவம் கொடுத்து நடத்தி வருகின்றன. அந்த வகையில், இன்று கோவையில் முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மாநாட்டின்போது, தமிழ்நாடு நிதி நுட்ப கொள்கை 2021 -யை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
இந்த விழாவில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள், தொழில் நிறுவனங்கள், தொழில் அதிபர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:-
தமிழ்நாடு அரசு மீது நம்பிக்கை வைத்து அனைத்து தொழிலதிபர்களும், தொழில் நிறுவனங்கள் சார்பில் வந்திருப்பவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
சோதனையான காலத்திலும் தமிழ்நாட்டுக்கு ஏராளமான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. மே மாதத்தில் ஆட்சிக்கு வந்தோம். ஜூலை மாதத்தில் முதலீட்டாளர் மாநாடு நடத்தினோம். செப்டம்பரில் ஏற்றுமதியாளர் மாநாடு நடத்தப்பட்டது. மீண்டும் நவம்பர் மாதத்தில் அடுத்த முதலீட்டாளர் மாநாட்டுக்கு வந்திருக்கிறோம். கடந்த 5 மாதங்களில் 3-வது முறையாக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டுள்ளது. இதே வேகத்தில் போனால், முதலீடுகளை ஈர்ப்பதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் பெறும்.
நாம் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற லட்சிய இலக்கினை அடைவது வெகு தொலைவில் இல்லை என்ற நம்பிக்கையை எல்லோருக்கும் அளித்துக் கொண்டு வருகிறோம்.
மேலும், தமிழ்நாட்டில் பரவலான வளர்ச்சி ஏற்படும் வகையில் 22 மாவட்டங்களுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 2,3-ம் கட்ட நகரங்களில் நியோ டைடல் பார்க்குகள் அமைக்கப்படும்.
இந்த 52 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் வரவுள்ள திட்டங்களால் 74,835 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். நாட்டிலேயே தமிழ்நாடு முதல் மாநிலமாக வளர்ச்சி அடைவதுதான் எனக்கு உண்மையான மகிழ்ச்சி.
இவ்வாறு அவர் பேசினார்.
இதையும் படியுங்கள்.. கோவையில் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு- மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.35,208 கோடிக்கு ஒப்பந்தம்
கோவை கொடிசியா வளாகத்தில் இன்று தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு நவம்பர் 2021 கோயம்புத்தூர் என்ற பெயரில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
கோவை:
தொழில் வளத்தையும், கட்டமைப்பையும் ஊக்குவிப்பதற்காக முதலீட்டாளர்கள் மாநாட்டை அந்தந்த மாநில அரசுகள் முக்கியத்துவம் கொடுத்து நடத்தி வருகின்றன.
தமிழகத்திலும் முதலீட்டாளர்கள் மாநாடு அதிக முக்கியத்துவம் கொடுத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்துக்கான வளர்ச்சியை நோக்கமாக கொண்டு உற்பத்தி துறைக்கு முக்கியத்துவம் அளித்து வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என தெரிவித்தார்.
தி.மு.க ஆட்சி அமைந்ததும், முதல் மாதத்திலேயே ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய பயணத்தின் ஒரு நடவடிக்கையாக சென்னை கிண்டியில் முதல் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து 2-வதாக சென்னை கலைவாணர் அரங்கில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த இரு மாநாடுகளிலும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக ரூ.21 ஆயிரம் கோடிக்கும் அதிகமான அளவில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டுமே நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழகத்தில் உள்ள கோவை போன்ற தொழில் நகரங்களிலும் நடத்தினால் மற்ற பகுதிகளும் தொழில் விரிவாக்கம் பெறும் என தொழில்துறையினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று தற்போதைய தி.மு.க. அரசின் 3-வது முதலீட்டாளர்கள் முகவரி மாநாடு கோவை கொடிசியாவில் இன்று நடந்தது.
முதலீட்டாளர்கள் முகவரி மாநாட்டில் பங்கேற்பதற்காகவும், கோவை, திருப்பூரில் புதிய திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகவும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக நேற்று காலை விமானம் மூலம் கோவை வந்தார்.
நேற்று கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நடைபெற்ற அரசு விழாக்களில் பங்கேற்று புதிய திட்டங்களை தொடங்கி வைத்ததுடன், பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். தொடர்ந்து இரவு கோவை விருந்தினர் மாளிகையில் தங்கினார்.
இன்று காலை கோவை கொடிசியா வளாகத்தில் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு நவம்பர் 2021 கோயம்புத்தூர் என்ற பெயரில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
மேலும் 10 நிறுவனங்களின் ரூ.3,928 கோடி மதிப்பிலான திட்டங்களையும் முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து 13 நிறுவனங்களின் ரூ.13,413 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இந்த திட்டங்கள் மூலம் மட்டும் 15,525 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்க உள்ளது.
இன்று போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் தொடங்கி வைக்கப்பட்ட திட்டங்கள் மூலம் மொத்தம் 95,320 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்க உள்ளது.
முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாடு நிதி நுட்ப கொள்கை 2021 -யை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
அதனை தொடர்ந்து தமிழ்நாடு ஒற்றை சாளர அலைபேசி செயலியையும் அவர் அறிமுகம் செய்து வைத்தார்.
கோவையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாடு இங்குள்ள தொழில்துறையின் அடுத்த கட்ட விரிவாக்கம், வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு அதிகரிப்புக்கு பெரிதும் உதவியாக அமையும் என கோவையை சேர்ந்த தொழில்துறையினர் தெரிவிக்கின்றனர்.
தொழில் வளத்தையும், கட்டமைப்பையும் ஊக்குவிப்பதற்காக முதலீட்டாளர்கள் மாநாட்டை அந்தந்த மாநில அரசுகள் முக்கியத்துவம் கொடுத்து நடத்தி வருகின்றன.
தமிழகத்திலும் முதலீட்டாளர்கள் மாநாடு அதிக முக்கியத்துவம் கொடுத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்துக்கான வளர்ச்சியை நோக்கமாக கொண்டு உற்பத்தி துறைக்கு முக்கியத்துவம் அளித்து வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என தெரிவித்தார்.
தி.மு.க ஆட்சி அமைந்ததும், முதல் மாதத்திலேயே ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய பயணத்தின் ஒரு நடவடிக்கையாக சென்னை கிண்டியில் முதல் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து 2-வதாக சென்னை கலைவாணர் அரங்கில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த இரு மாநாடுகளிலும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக ரூ.21 ஆயிரம் கோடிக்கும் அதிகமான அளவில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டுமே நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழகத்தில் உள்ள கோவை போன்ற தொழில் நகரங்களிலும் நடத்தினால் மற்ற பகுதிகளும் தொழில் விரிவாக்கம் பெறும் என தொழில்துறையினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று தற்போதைய தி.மு.க. அரசின் 3-வது முதலீட்டாளர்கள் முகவரி மாநாடு கோவை கொடிசியாவில் இன்று நடந்தது.
முதலீட்டாளர்கள் முகவரி மாநாட்டில் பங்கேற்பதற்காகவும், கோவை, திருப்பூரில் புதிய திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகவும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக நேற்று காலை விமானம் மூலம் கோவை வந்தார்.
நேற்று கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நடைபெற்ற அரசு விழாக்களில் பங்கேற்று புதிய திட்டங்களை தொடங்கி வைத்ததுடன், பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். தொடர்ந்து இரவு கோவை விருந்தினர் மாளிகையில் தங்கினார்.
இன்று காலை கோவை கொடிசியா வளாகத்தில் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு நவம்பர் 2021 கோயம்புத்தூர் என்ற பெயரில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
தொடர்ந்து முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 52 நிறுவனங்கள் ரூ.34,723 கோடி மதிப்பிலும், வான்வெளி மற்றும் பாதுகாப்புத்துறை உள்பட 7 நிறுவனங்கள் ரூ.485 கோடி மதிப்பிலும் என ரூ.35 ஆயிரத்து 208 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் தமிழகத்தில் 76,795 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
இன்று போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் தொடங்கி வைக்கப்பட்ட திட்டங்கள் மூலம் மொத்தம் 95,320 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்க உள்ளது.
முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாடு நிதி நுட்ப கொள்கை 2021 -யை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
அதனை தொடர்ந்து தமிழ்நாடு ஒற்றை சாளர அலைபேசி செயலியையும் அவர் அறிமுகம் செய்து வைத்தார்.
கோவையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாடு இங்குள்ள தொழில்துறையின் அடுத்த கட்ட விரிவாக்கம், வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு அதிகரிப்புக்கு பெரிதும் உதவியாக அமையும் என கோவையை சேர்ந்த தொழில்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்த விழாவில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள், தொழில் நிறுவனங்கள், தொழில் அதிபர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதையும் படியுங்கள்... ஆப்பிளை விட தக்காளிக்கு அதிக விலை- பேக்கிங் செய்து கேரளாவுக்கு அனுப்பும் வியாபாரிகள்
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X